Friday, August 3, 2012

வெற்றிலைக்கு போடப்படும் வாக்கு பள்ளிவாசலை உடைக்கும் வேட்டு:வேட்பாளர் யூ.எல்.எம்.என். முபீன்!

வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
முஸ்லிம்கள் எவரும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்த பிறகும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது நாம் நமது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரமாகும்.
தம்புள்ளயில் பள்ளிவாசலை உடைத்தபோது அதை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதேபோன்று தெஹிவளை யில் பள்ளிவாசல் மீதும் பேரினவாத சக்திகள் காடைத்தனம் செய்தன.
குருநாகலிலுள்ள கிராம மொன்றில் பள்ளிவாசலில் நோன்புக் காலத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பள்ளிவாசலைச் _ற்றிவளைத்த பேரினவாத பௌத்த தேரர்கள் “பிரித்” ஓதினார்கள்.
இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்படும் இந்த அராஜகங்கள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாசலை உடைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகள் முஸ்லிம்களின் புனித பள்ளி வாசல்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவைகளை எல்லாம் பார்த்த பிறகும் முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க முடியாது. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமின் குரல் முதன் முதலாக காத்தான்குடியில் ஒலித்தபோதுதான் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் வாய் திறக்க ஆரம்பித்தனர்.
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாற்றுக் கட்சியிலிருந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் அணிதிரளுகின்றனர். எனவேதான் வாக்குகளைச் சிதறடிக்காமல் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.
Thnaks: neruppu.com

Thursday, July 26, 2012

மு.காவின் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள்.

நேற்று ( 26.07.2012 ) ஓட்டமாவடி மண்ணுல் சல்வா கட்டடத் தொகுதியில் இப்தார் நிகழ்வும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான ஆராயும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வினை கல்குடா மத்தி பிரிதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி அவா்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.இதில் கல்குடாவின் மூன்று மு.கா வேட்பாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனா்.மேலும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இருந்து மு.கா பக்கம் வந்த ஜனாப்.றசீது அவா்களும் மு.கா போராளிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என தமது கருத்துக்களை முன்வைத்தார்.இந் நிகழ்வில் பாடசாலை அதிபா்கள் ஆசிரியா்கள்  சட்டத்தரணிகள் மு.கா போரளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு மஹ்ரிப் தொழுகையுடன் முடிவடைந்தது.

மீண்டும் சூடான செய்திகளுடன்

எங்களது வலைப்பதிவுக்குழு வெளிநாடு சென்றிருந்ததால் தொடர்ந்து பதிவுகளை இட முடியவில்லை.விரைவில் சூடான செய்திகளை இத்தளத்தில் காணலாம்.

Tuesday, May 17, 2011

ஆலய வழிபாட்டுக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோராவெளி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின்போது நண்பர்களுடன் கோராவெளி ஆற்றில் குளிக்கச்சென்ற சென்ற இளைஞன் ஒருவர் இன்று காலை ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவசாமி (வயது 26) என்ற மேசன் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
இதனால் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று குளித்துக் கொண்டிருந்த வேளையிலே மேற்படி இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மட்டு. காத்தான்குடியில் சடலம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டு வளவிற்குள் சடலமொன்று புதைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி 06ஆம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வளவில் வசித்து வந்த 27வயமான புஹாரி றிஸ்வியா எனும் பெண் கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போயுள்ளார். அப்போது இப்பெண் ஐந்து மாத கர்ப்பிணி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.


Thanks : Tamil win