கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கல்குடாப் பிரதேசத்தின் பகுதிகளான ஓட்டமாவடி வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை செம்மண் ஓடை மீராவோடை போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.அதன் காரணமாக பொது மக்கள் தமது உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
புது வருட தினத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.இது தொடர்பாக எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
வாழைச்சேனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.
No comments:
Post a Comment