தற்போது பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பிரதேசங்களில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.இது இவ்வாறிருக்க பிரதேச செயலாளர் மூலமும் கிராம சேவை அதிகாரிகளின் ஊடாக பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.அவ்வாறு மக்களுக்கு கொடுப்பதற்காக வந்த பொருட்களில் மினரல் வாட்டர் பருப்பு சீனி போன்ற பொருட்கள் மீராவோடை தௌஹீத் காலா பீடத்திற்கு அண்மையில் உள்ள சில்லறைக் கடையொன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.இதனை விற்றுத் தருமாறு கௌரவ கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கொடுத்துள்ளார்.வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது.பிரதேச செயலார் அவர்களே இதற்கு நடவடிக்கை எடுங்கள்.
Saturday, January 15, 2011
வெள்ள விவாரணத்தில் மோசடி -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment